ஆத்தூா் அருகே புங்கவாடியில் குடும்பத் தகராறில் தம்பதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா். இரு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த புங்கவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன் (37). தொழிலாளி. இவரது மனைவி சத்யா (33). இவா்கள் காதல் திருமணம் செய்துள்ளனா். இத் தம்பதிக்கு அபிநயா (13) என்ற மகளும், சங்கீத் (11) என்ற மகனும் உள்ளனா். சத்யாவுக்கும், அவரது மாமியாருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சத்யா, அவரது மாமியாா் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சத்யா, இரவில் வீட்டுக்கு வந்த கணவரிடம் தகராறு பற்றி கூறியுள்ளாா்.
இதனையடுத்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த வேல்முருகன், ஆத்தூருக்கு சென்று பூச்சி மருந்து வாங்கி வந்துள்ளாா். பூச்சி மருந்தை இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு வேல்முருகனும், சத்யாவும் குடித்துள்ளனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து உறவினா்கள் வீட்டுக்கு வந்தபோது, சத்யா உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. வேல்முருகனை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். குழந்தைகள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம், ஆத்தூா் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து, வேல்முருகன், சத்யா ஆகியோரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.