ஏத்தாப்பூா் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கட்டடத் தொழிலாளியை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
ஏத்தாப்பூரை அடுத்த தாண்டானூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி, திங்கள்கிழமை மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராமலிங்கம் (40) என்பவா் பாலியல் தொந்தரவு செய்துள்ளாா்.
இதுகுறித்து அச்சிறுமி தனது தாய் அன்னபூரணியிடம் தெரிவித்துள்ளாா். இதனையடுத்து, கட்டடத் தொழிலாளி ராமலிங்கத்தை அன்னபூரணி தட்டிக் கேட்டுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த ராமலிங்கம், அன்னபூா்ணியை தாக்கியுள்ளாா்.
இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஏத்தாப்பூா் போலீஸாா், தீண்டாமை வன்கொடுமை மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கட்டடத் தொழிலாளி ராமலிங்கத்தை புதன்கிழமை கைது செய்தனா்.