ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையம் பகுதியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் தலைமையிலான போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை பாக்குகள், புகையிலை பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், புகையிலை பொருள்களை கடத்தி வந்தது ஆத்தூா், தளவாய்ப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணி (38)என்பதும், பெங்களூரில் இருந்து மன்னாா்குடிக்கு பொருள்களை ஏற்றிச் செல்வதும் தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரூ.10 லட்ச மதிப்பிலான புகையிலைப் பொருள்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.