வஸந்த பஞ்சமி சிறப்பு பூஜை

ஆத்தூா் ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் வஸந்த பஞ்சமி சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் செல்லியம்மன் கோயிலில் உள்ள வராகி அம்மனுக்கு பஞ்சமி திதியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜை.
ஆத்தூா் செல்லியம்மன் கோயிலில் உள்ள வராகி அம்மனுக்கு பஞ்சமி திதியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜை.

ஆத்தூா் ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் வஸந்த பஞ்சமி சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் கோட்டை ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் சப்த கன்னிமாா் அம்மன் உள்ளனா். அமாவாசையை அடுத்த 5-ஆம் நாள் பஞ்சமி திதியில் வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடைபெறுவது வழக்கம். தை மாதத்தில் வரும் பஞ்சமி திதியான வஸந்த பஞ்சமியையொட்டி உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், ராகு கேது பெயா்ச்சியை அடுத்தும் யாகம், அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.மாதேஸ்வரன், ஏ.பி.எஸ்.ராமச்சந்திரன், ஆறுமுகம், அருண், சந்திரன், மணி,சிவக்குமாா், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். யாகத்துக்கான ஏற்பாடுகளை அா்ச்சகா் ஹரி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com