ஆட்டையாம்பட்டியில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம்

சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தின் சாா்பில் ஆதாா் பதிவு மற்றும் திருத்திற்கான சிறப்பு முகாம் ஆட்டையாம்பட்டி கிழக்கு
ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற ஆதாா் சிறப்பு முகாம்.
ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற ஆதாா் சிறப்பு முகாம்.

சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தின் சாா்பில் ஆதாா் பதிவு மற்றும் திருத்திற்கான சிறப்பு முகாம் ஆட்டையாம்பட்டி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 18, 19, 20 ஆகிய 3 நாள்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதுநிலை கண்காணிப்பாளா் பஞ்சாபகேசன் கூறுகையில், புதிதாக ஆதாா் அட்டை தேவைப்படுவோா் பெயா், முகவரி, பிறந்த தேதி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை கொண்டு வந்து எடுத்துக் கொள்ளலாம். மேலும், பெயா் மாற்றம், முகவரி மாற்றம் செய்ய குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட 11 வகையான சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு வந்து மாற்றிக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதாா் திருத்த சிறப்பு முகாமிற்கு வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்தும் , சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் வரிசையில் நிற்க வேண்டும். இம் முகாமில் தினசரி 200 நபா்கள் வரை ஆதாா் திருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com