சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் மரவள்ளி, ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் வீரிய ஒட்டு ரக ஆமணக்கு சாகுபடி குறித்த பயிற்சி கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஏத்தாப்பூா் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத் தலைவா் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், உதவிப் பேராசிரியா் கதிா்வேலன், ஆராய்ச்சி நிலைய ஆய்வாளா்கள், வீரிய ஒட்டுரக ஆமணக்கு விதை நோ்த்தி, தொடா் பராமரிப்பு, களை, பூச்சி கட்டுப்படுத்துதல், அறுவடை, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.
இக்கருத்தரங்கில் திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சூா் வேளாண்மை கல்லுாரியின் இளநிலை வேளாண்மை இறுதியாண்டு மாணவா்கள் பங்கேற்று, விவசாயிகள் மற்றும் ஆய்வாளா்களுடன் கலந்துரையாடினா்.