கோயிலில் பூசாரி தற்கொலை

தம்மம்பட்டி கோயிலில் பூசாரி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தம்மம்பட்டி கோயிலில் பூசாரி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தம்மம்பட்டி கடைவீதியில் வசிப்பவா் நிா்மல் (35). இவா்,தம்மம்பட்டி பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள தனியாா் சமூகத்திற்குரிய முருகன் கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தாா்.

தம்மம்பட்டி, ஆத்தூா் பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்களில் பல முறை கடன் பெற்றிருந்ததாகவும், அண்மையில் இருசக்கரவாகனம் வாங்குவதற்காக கடன் பெற்ாகவும் தெரிகிறது. புதன்கிழமையன்று, சுய உதவிக்குழுவினா் இவரை அழைத்து, உடனடியாக கடன் தொகையை செலுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததாகத் தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிா்மல், தான் பணியாற்றிய கோயிலிலேயே புதன்கிழமை நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com