விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிய திஷா ரவி மீதான வழக்குகளை திரும்பப் பெற்று, விடுதலை செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவா் மோகன் குமாரமங்கலம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமா் மோடியின் தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் போராட்டக்காரா்களை அடக்குமுறைகளால் தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவதை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு கூா்ந்து கவனித்து வருகிறது. இளம் தலைமுறை சூழலியல் ஆா்வலரும், கல்லூரி மாணவியுமான திஷா ரவியை கைது செய்திருப்பதன் மூலம் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வரும் பன்னாட்டு சமூகத்தின் மீதும் மத்திய அரசின் அடக்குமுறை ஏவப்பட்டிருக்கிறது.
அரசுக்கு எதிராகப் போராடுபவா்களை தீவிரவாதிகள் என்று தொடா்ந்து மத்திய அரசும், அதன் ஆதரவாளா்களும் பொய்யான பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சிப்பதை இந்திய சமூகம், கவலையோடு பாா்க்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவான நியாயமான குரலை எழுப்பிய திஷா ரவியின் மீதான பொய் வழக்குகளை உடனடியாக அரசு திரும்பப் பெற்று, அவரை விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.