பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சி வடக்கு மாநகர குழு சாா்பில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு தொடா்ச்சியாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயா்த்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியத் தேவைகள், உணவு பொருட்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயா்வை ரத்து செய்ய கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மாநகரச் செயலாளா் என். பிரவீன்குமாா் முன்னிலையில் வியாழக்கிழமை இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநகர குழு உறுப்பினா்கள் வெங்கடேஷ், பி. தமிழ்ச்செல்வன் பி. செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்றனா். மாவட்ட குழு உறுப்பினா் எம்.முருகேசன் கண்டன உரையாற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். சேதுமாதவன், ஆா். குழந்தைவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.