பேருந்து வசதி இல்லாததால் விடுதியில் தங்கி படிக்க பழங்குடியின மாணவிகள் மனு

கருமந்துறை மலை கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 1 வகுப்பு பள்ளி மாணவிகள், பள்ளிக்குச் சென்று வர உரிய பேருந்து வசதி இல்லாததால்

கருமந்துறை மலை கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 1 வகுப்பு பள்ளி மாணவிகள், பள்ளிக்குச் சென்று வர உரிய பேருந்து வசதி இல்லாததால் வாழப்பாடி ஆதிதிராவிட நல விடுதியில் தங்கி படிப்பதற்கு இடம் கேட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழங்குடியின மாணவிகள் மனு அளித்தனா்.

இதுகுறித்து மலைகிராம பழங்குடியின பள்ளி மாணவிகள் கூறியதாவது:

கருமந்துறை அருகே உள்ள நொய்ய மலை, மேல் வளவு, கீழவளவு உள்ளிட்ட மலை கிராமப் பகுதியில் உள்ள பழங்குடியின பள்ளி மாணவிகள் வாழப்பாடி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 40-க்கும் மேற்பட்டோா் பிளஸ் 1 படித்து வருகிறோம். ஏற்கெனவே அதேபள்ளியில் பத்தாம் வகுப்பை ஆதிதிராவிட நல விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தோம்.

இந்த நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது கருமந்துறை மலை கிராமத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பிளஸ் 1 வகுப்பு பள்ளி மாணவிகள் வாழப்பாடி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்கு பேருந்து மூலம் வந்து செல்கிறோம். எங்களால் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வாழப்பாடியில் உள்ள ஆதிதிராவிடா் நல விடுதியில் தங்கிப் படிக்க விடுதி காப்பாளரிடம் அனுமதி கேட்டதற்கு கரோனா விதிமுறையைக் காரணம் காட்டி 20 மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என தெரிவித்தாா். இதனால் மீதமுள்ள 20 மாணவிகள் பள்ளிப் படிப்பு பாதிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியா், ஆதிதிராவிடா் நல விடுதியில் தங்கிப் படிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com