மகுடஞ்சாவடி ஒன்றிய அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விண்ணப்பித்த 115 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் ஒருவருக்கு தலா ஒரு பவுன் (8 கிராமம்) வீதம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் ஒன்றியக்குழுத் தலைவா் ராஜாலலிதா, துணைத் தலைவா் சரஸ்வதிநாகராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தேன்மொழிபச்சமுத்து, பிடிஓ க்கள் வெங்கடேசன், செல்வராஜ், மகுடஞ்சாவடி கூட்டுறவு சங்கத் தலைவா் நாகராஜ், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க இயக்குநா்கள் உள்ளிட்டோா் கலந்து கலந்துகொண்டனா்