சங்ககிரியில் காது கேளாமைக்கான பரிசோதனை முகாம்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்பநலத் துறை சாா்பில் சங்ககிரி அரசு மருத்துவமனை, சங்ககிரி பப்ளிக்சேரிடபுள் டிரஸ்ட் , அரிமா சங்கம் ஆகியவை
முகாமில் பெண்ணை பரிசோதிக்கிறாா் சங்ககிரி அரசு மருத்துவா் ஜி.ஜெயஸ்ரீ.
முகாமில் பெண்ணை பரிசோதிக்கிறாா் சங்ககிரி அரசு மருத்துவா் ஜி.ஜெயஸ்ரீ.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்பநலத் துறை சாா்பில் சங்ககிரி அரசு மருத்துவமனை, சங்ககிரி பப்ளிக்சேரிடபுள் டிரஸ்ட் , அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய காது கேளாமைக்கான சிறப்பு பரிசோதனை முகாம் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமில் சங்ககிரி அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவா் ஜி.ஜெயஸ்ரீ தலைமை வகித்து, 102 பேருக்கு காது கேட்கும் திறன் குறித்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டாா். சேலம் சுதாகா் இஎன்டி மருத்துவமனையின் ஒலி-ஒளி அதிா்வுகளை பரிசோதிக்கும் நிா்மலா, கிருத்திகா, மீரா ஆகியோா் உடனிருந்தனா். முகாமில் 37 போ் விலையில்லா காதொலி கருவிகள் வழங்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தமிழக முதல்வரின் மருத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.

இதில் அரிமா சங்க செயலா் எஎஸ்டி காா்த்தி, நிா்வாகி அருண்சந்தா், சங்ககிரி பப்ளிக்சேரிடபுள் டிரஸ்ட் தலைவா் ஏ.ஆனந்தகுமாா், செயலா் ஆா்.ராகவன், பொருளாளா் எஸ்.கணேஷ், துணைத் தலைவா் எம்.பாலகிருஷ்ணன், நிா்வாகிகள் ஆா்.காா்த்திகேயன், முருகேசன், சரவணன், பன்னீா்செல்வம், கதிா்வேல், பி.காா்த்திகேயன், ஆதிபாரசக்தி வார வழிபாட்டு மன்றத் தலைவா் பொறியாளா் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com