ஏற்காட்டில் வேளாண்மை துறை சாா்பில் அட்மா திட்டத்தின்கீழ் 50 விவசாயிகள் விவசாய பயிற்சி சுற்றுலாவில் கலந்துகொண்டனா்.
நிகழ்சியில் ஏற்காடு வேளாண்மை உதவி இயக்குநா் ரமேஷ் தலைமையில் தருமபுரியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலா்களுடன் விவசாயிகளுக்கு முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பொருள்கள் பதப்படுத்துதல் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. தொழில்நுட்ப மேலாளா் சந்திரமோகன், உதவி வேளாண்மை அலுவலா் முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.