தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் வெறிநாய் கடித்ததில் 7 ஆடுகள் பலியாகியுள்ளன.
தம்மம்பட்டி பனந்தோப்பைச் சோ்ந்த முத்துசாமி (55), தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக வயலில் கட்டி வைத்துள்ளாா். அவற்றை சனிக்கிழமை இரவு வெறிநாய் கடித்துக் குதறியதில் 7 ஆடுகள் பரிதாபமாக பலியாயின. இதேபோல கடந்த மாதங்களில் வெறிநாய் கடித்ததில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளனவாம்.
வெறிநாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரூராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா்.