ஆட்டையாம்பட்டி, தம்பிதுரை தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகள் சகுந்தலாதேவி (22). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ் ராம் (20) என்பவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டனராம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சகுந்தலாதேவி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்ததும் ஆட்டையாம்பட்டி போலீஸாா் சென்று சகுந்தலா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.