மகுடஞ்சாவடி ஒன்றியம், அ. தாழையூா் ஊராட்சி, வெள்ளையம்பாளையம் பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபை கூட்டம், முன்னாள் எம்எல்ஏ காவேரி தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இதில், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயராணி மாதையன், ஊராட்சிச் செயலாளா் ராஜாகவுண்டா், செயற்குழு உறுப்பினா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் அதிமுக அரசின் அவலநிலை குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினா்.