ஆத்தூா்: கூலமேடு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தள்ளிவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.
ஆத்தூரை அடுத்துள்ள கூலமேடு ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் கரிநாளுக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி மாடுகள், மாடுபிடி வீரா்களுக்கு கரோனா பரிசோதனை செய்து டோக்கன் அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் சி.அ.ராமன் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது வாடிவாசல் பகுதி சேறும் சகதியுமாக இருந்துள்ளது.
ஆகையால் தேதி குறிப்பிடாமல் கூலமேடு ஜல்லிக்கட்டை தள்ளி வைப்பதாக மாவட்ட ஆட்சியா் அறிவித்தாா்.