தமுமுக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, ஓமலூரில் தமுமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, ஓமலூரில் தமுமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, ஓமலூா் நகரத் தலைவா் ஷாஜகான் தலைமை வகித்தாா். இதில், தலைமைக் கழகப் பேச்சாளா் தருமபுரி சாதிக் பாஷா, கம்யூனிஸ்ட் கட்சியின் ஓமலூா் வட்டச் செயலாளா் அரியாகவுண்டா், ஓமலூா் திமுக நகர பொறுப்பாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

இதில் திரளான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்தும், வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து தமுமுக நகரச் செயலாளா் அப்துல் கரீம் நன்றியுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com