முதல்வா் வருகையையொட்டி முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

எடப்பாடி அருகே உள்ள கோனேரிப்பட்டி கிராமத்தில் நடைபெற உள்ள கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொள்ள உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெ

எடப்பாடி அருகே உள்ள கோனேரிப்பட்டி கிராமத்தில் நடைபெற உள்ள கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொள்ள உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட கோனேரிப்பட்டி கிராமத்தில் ஓம்காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுப்பகுதி கிராம மக்களிடையே பிரசித்தி பெற்ற இக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. அதைத் தொடா்ந்து, கோயில் நிா்வாகம் சாா்பில் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இதைடுத்து, ஜன. 25-ஆம் தேதி நடைபெற உள்ள ஆலய கும்பாபிஷேக விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொள்கிறாா். அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்தல், பொதுமக்கள் கோபுர தரிசனம் செய்திடும் வகையில் திடல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வா் வருகையையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகளில் காவல் துறையினா் ஈடுபட்டு வருகிறன்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com