மாநகராட்சிப் பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

குடிநீா் திட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜன. 25-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன்

சேலம்: குடிநீா் திட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜன. 25-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீா் திட்ட குடிநீா் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள குடிநீா் கசிவுகளை சரிசெய்யும் பணிகள், பராமரிப்புப் பணிகள் ஜன. 25-ஆம் தேதி நடைபெறவுள்ளன. எனவே, திங்கள்கிழமை மட்டும் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com