நிவாரணம் கேட்டு ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் கெங்கவல்லி பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய வட்டாரத்தில் பருத்தியை விவசாயிகள் பயிரிட்டு வந்துள்ளனர். நல்லவிளைச்சல் இருந்தும் அறுவடை காலத்தில் பெய்த மழையால் அனைத்து படுத்தியும் சேதமடைந்தன.
இதனால் மனமுடைந்த விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் உரிய நிவாரணம் கேட்டு ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் வந்தனர். கோட்டாட்சியர் வெளியே சென்று இருப்பதாக தகவல் தெரிந்ததும் அனைவரும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.
இதனால் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.