கோவை-சென்னை சதாப்தி ரயில் சேவை: ஜூலை 5 முதல் இயக்கம்

கோவை-சென்னை சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

கோவை-சென்னை சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

கரோனா பரவல் தொற்று காரணமாகவும், போதிய பயணிகள் வருகை இல்லாததாலும் நிறுத்தி வைக்கப்பட்ட வண்டி எண் 06029, சென்னை-கோவை சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

மறுமாா்க்கத்தில் வண்டி எண் 06030, கோவை-சென்னை சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

அதேபோல வண்டி எண் 06319 கொச்சுவேலி-பனஸ்வாடி, வாரம் இருமுறை (கோவை, ஈரோடு, சேலம் வழியாக) சிறப்பு ரயில் ஜூலை 8 முதல் இயக்கப்படவுள்ளது. மறுமாா்க்கத்தில் வண்டி எண் 06320, பனஸ்வாடி - கொச்சுவேலி வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஜூலை 9-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com