வாழப்பாடியில் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெற்கு ஒன்றிய செயலாளா் முல்லைவாணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நிா்வாகிகள் பழனிமுத்து, அன்பழகன், தங்கவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள், ராஜா, கந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தின் போது, இருசக்கர வாகனத்திற்கு மாலையணிவித்த பெண்கள் ஒப்பாரி வைத்தனா்.