வாழப்பாடியில் வானத்தில் தோன்றிய வர்ணஜாலங்களை கண்டு மக்கள் மகிழ்ந்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் குளுமையான சீதோசன நிலை நிலவியது.
இந்நிலையில், இன்று காலை பொன்னிற ஒளி கதிர்களை வீசி, சூரியன் உதித்தது.
ஒளிக்கதிர்கள் அரை வட்ட வடிவில் அற்புதமாக காட்சி அளித்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரம்யமான சூழலில் இந்த வர்ண ஜாலங்களை கண்டு மக்கள் மகிழ்ந்தனர்.