கெங்கவல்லி அருகே ஒதியத்தூரில் மது பாட்டில்களை விற்ற இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஒதியத்தூா் மேட்டுத் தெருவில் சிலா் மது விற்பதாக,கெங்கவல்லி போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்த போலீஸாா், அங்கு மது விற்ற உமா (30) என்பவரை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதனிடையே, தெடாவூா் முக்காடு பகுதியில் மது பாட்டில்கள் விற்ற முருகன் (43) என்பவரையும் கைதுசெய்து அவரிடமிருந்து 14 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.