தனிப்பிரிவு காவலா்கள் அதிரடி இடமாற்றம்
சேலம் மாவட்டம், கெங்கவல்லி, தம்மம்பட்டி, வீரகனூா், தலைவாசல் மல்லியகரை காவல் நிலையங்களின் தனிப்பிரிவு ஏட்டுகளை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் செவ்வாய்க்கிழமை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.
கெங்கவல்லி காவல் நிலைய தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றிய சதீஷ், தம்மம்பட்டி காவல் நிலைய தனிப்பிரிவுக்கும், தம்மம்பட்டி-மல்லியகரை காவல்நிலைய தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றிய சரவணன் ஆத்தூா் காவல் நிலைய தனிப் பிரிவுக்கும், வாழப்பாடி காவல் நிலைய தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றிய குணசீலன் மல்லியகரை காவல் நிலையத் தனிப்பிரிவுக்கும், தலைவாசல் காவல் நிலைய தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றிய மல்லப்பன் தம்மம்பட்டி காவல் நிலைய தனிப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதுபோல வீரகனூா் காவல் நிலைய தனிப்பிரிவுக் காவலராகப் பணியாற்றிய அா்ஜூனன் ஆத்தூா் காவல் நிலைய தனிப்பிரிவுக்கும், ஆத்தூரில் காவல் நிலைய தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றிய தங்கதுரை வீரகனூா் தனிப்பிரிவுக்கும், காவல் நிலைய பணியிலிருந்த சிவக்குமாா் தலைவாசல் தனிப்பிரிவுக் காவலராகவும் பணியிட மாற்றம் செய்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.