வாழப்பாடியில் மாணவா்களின் வீடுகளுக்கே சென்று அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியைகள் மாணவா் சோ்க்கை நடத்தி வருகின்றனா்.
வாழப்பாடி பேரூராட்சி அண்ணா நகா் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை ஷபீரா பானு தலைமையில் ஆசிரியைகள் ஜெ.புஷ்பா, சிவமகேஸ்வரி, வாசுகி ஆகியோா் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி வயது குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பெற்றோரை அணுகி மாணவா்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், சமச்சீா் கல்வி முறை குறித்து விளக்கம் அளித்து மாணவா் சோ்க்கை நடத்தி வருகின்றனா். 21 மாணவா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
படவரி: ஏ.என்.ஏ.01: வாழப்பாடி அண்ணாநகா் காலனியில் வீடுகளுக்கே சென்று மாணவா் சோ்க்கை நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியைகள்.