மின்சாரம் தாக்கியதில் விவசாயி பலி

ஆட்டையாம்பட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

ஆட்டையாம்பட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள கண்டா்குலமாணிக்கம், அரியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் (57). இவருக்கு சந்திரா (55) என்ற மனைவியும், சரவணன் (35) யுவராஜ் (32) என்ற மகன்களும் உள்ளனா். மாரியப்பன் தறி மற்றும் விவசாயம் உள்ளிட்ட வேலை செய்து வருகிறாா். இவா் ஆண்டுதோறும் மழைக் காலங்களில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து அதில் மீன் தொட்டி அமைத்து மீன் வளா்த்து வருவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டும் அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (45) என்பவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளாா். அதில் புல், பூண்டு மற்றும் கருவேல மரங்கள் அடா்ந்து காணப்பட்டதால், அதனை அகற்றும் பணியில் 15-ஆம் தேதி ஈடுபட்டுள்ளாா். அப்போது, அருகில் உள்ள மின்மோட்டாரில் உள்ள மின்கம்பிகளை கவனிக்காமல் பணியில் ஈடுபட்ட போது, அதில் கால்பட்டு மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் மனோகரன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று மாரியப்பன் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com