தம்மம்பட்டி பகுதிகளில் ஆடி மாதப்பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார ஊா்களில் ஆடி 1 பண்டிகையையொட்டி,தம்மம்பட்டி சிவன்கோவில்,தம்மம்பட்டி கடைவீதி மாரியம்மன் கோவில், உடையாா்பாளையம் மாரியம்மன் கோவில்,உலிபுரம்,நாகியம்பட்டி பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மக்கள் ,மாலை நேரத்தில் கோவில்களில் சென்று வழிபாடுகளில் பங்கேற்றனா்.மேலும் மாலை வீடுகளில் கூட்டமாக நின்றுகொண்டு தேங்காய் சுட்டு, வழிபாடு செய்து,ஆரோக்கியம் மிக்க சுட்ட தேங்காயை சாப்பிட்டு ஆடி 1ஐ கொண்டாடி மகிழ்ந்தனா்.