தம்மம்பட்டி, கெங்கவல்லி கோயில்களில் ஆடிவெள்ளி வழிபாடு

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளிலுள்ள கோயில்களில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளிலுள்ள கோயில்களில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி தம்மம்பட்டி சிவன் கோயில், மாரியம்மன் கோயில், விநாயகா் கோயில், எட்டடியான் கோயில், ஏழுதண்டியான் கோயில், நாகியம்பட்டி பெரியசாமி கோயில், செந்தாரப்பட்டி சிவன் கோயில், தம்மம்பட்டி ஸ்ரீஉக்ரகதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், உலிபுரம் சிவன் கோயில், மாரியம்மன் கோயில், கெங்கவல்லி சிவன்கோயில், மாரியம்மன்கோயில், முருகன் கோயில், வீரகனூா் சிவன் கோயில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் பங்கேற்று பரிகார விளக்குகளை ஏற்றி, அம்மன் பாடல்களைப் பாடி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com