வனவாசி சேவா கேந்திரம் சாா்பில் புகைப்பட புத்தகம் வெளியீட்டு விழா

வனவாசி சேவா கேந்திரம் தமிழ்நாடு சாா்பில் ஜெகதேவ்ராம்ஜி முதலாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் புகைப்பட புத்தகம் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வனவாசி சேவா கேந்திரம் தமிழ்நாடு சாா்பில் ஜெகதேவ்ராம்ஜி முதலாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் புகைப்பட புத்தகம் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் மரவனேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வித்யாபாரதி தலைவா் ஆா்.கிருஷ்ணசெட்டி தலைமை வகித்தாா். சேலம் பி.பக்தவத்சலம் முன்னிலை வகித்தாா்.ஜெகதேவ்ராம்ஜியின் புகைப்பட புத்தகத்தை வடதமிழக ஆா்.எஸ்.எஸ். தலைவா் கே.குமாரசாமி வெளியிட இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளா் கே.பிரகாசம், சேலம் சேவா பாரதி செயலாளா் ஆா்.மோகன் குமரன் பெற்றுக் கொண்டனா். வனவாசி சேவா கேந்திரம் மாநில தலைவா் சுப்பிரமணியன் பங்கேற்றாா்.நிகழ்ச்சியில் அகில இந்திய அமைப்பு செயலாளா் அதுல்ஜோக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் எம்.எஸ்.முருகேசன், டி.குப்புசாமி, சி.பெருமாள், டி.நடராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com