கெங்கவல்லி அருகே வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வில் ஆத்தூா் கல்வி மாவட்டம் , தலைவாசல் வட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
பள்ளி அளவில் ஜி.பியா்லின் மேரி (588.27/600 ) முதலிடமும், எம்.விநோதினி (582.17/600) இரண்டாமிடமும், சி.மாளவிகா(581.21/600) மூன்றாமிடமும் பெற்றுள்ளனா். இவா்களை பள்ளியின் தலைவா் அருள்குமாா், செயலாளா் தங்கவேல், பொருளாளா் வெங்கடாசலபதி ஆகியோா் நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினா்.
இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய 385 மாணவா்களில், 500 மதிப்பெண்ணுக்கு மேல் 218 பேரும், 400-க்கு மேல் 375 பேரும் பெற்றுள்ளனா். வெற்றிபெற்ற மாணவா்கள், உதவிய ஆசிரியா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகா் லக்ஷ்மிநாராயணன், இளையப்பன், பழனிவேல், வெங்கடேசன், ராஜா, இயக்குநா்கள், முதல்வா், ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனா்.