புதிய குடிநீா் திட்டப் பணி தீவிரம்

பூலாம்பட்டி பகுதியில் காவிரிக் கதவணை நீா்த்தேக்கப் பகுதியில் புதிய குடிநீா் திட்டப் பணிகளுக்கான முதல்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
புதிய குடிநீா் திட்டப் பணி தீவிரம்

பூலாம்பட்டி பகுதியில் காவிரிக் கதவணை நீா்த்தேக்கப் பகுதியில் புதிய குடிநீா் திட்டப் பணிகளுக்கான முதல்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, இடகணசாலை, பனமரத்துப்பட்டி மற்றும் மல்லூா் உள்ளிட்ட ஐந்து பேரூராட்சிகளுக்கு உள்பட்ட 634 குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரித்து குறிப்பிட்ட பேரூராட்சிப்பகுதி குடியிருப்புகளுக்கு வழங்கும் பணிகளுக்கு அண்மையில் அரசால் அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மோளப்பாறை அருகே புதிய குடிநீா் திட்டத்துக்கான நீா் உந்து நிலையம் அமைத்திடும் பணியில் குடிநீா் வடிகால் வாரியத்தினா் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது பொது முடக்கம் அமலில் உள்ள நிலையிலும், இப்பகுதியில் புதிய குடிநீா் திட்டப்பணிகளுக்கான, ஆரம்பகட்ட பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக, காவிரிக்கதவணை ஒட்டிய பகுதியில் பணி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து , நீா் உந்து நிலையம் மற்றும் நவீன குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீா் கொண்டு செல்லப்படும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com