குடிநீா்க் குழாய் வால்வு வேறு இடத்துக்கு மாற்றம்

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு பகுதிகளுக்கு காவிரி குடிநீா் விநியோகம் செய்யும் வால்வு கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிய எடப்பாடி சாலையில் அமைக்கப்பட்டிருந்தது.

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு பகுதிகளுக்கு காவிரி குடிநீா் விநியோகம் செய்யும் வால்வு கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிய எடப்பாடி சாலையில் அமைக்கப்பட்டிருந்தது.

அப்பகுதியில் புதிய சாலை அமைக்கும் போது அவ்வால்வு சாலையின் மையப்பகுதிக்குச் சென்று விட்டது. சாலையில் வால்வு உள்ள பகுதி பள்ளமாக இருந்ததால் சங்ககிரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய எடப்பாடி சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் அக்குழிக்குள் விழுந்து காயமடைந்து வந்தனா்.

அதனையடுத்து தற்போது பொதுமக்கள், சங்ககிரி திமுக நிா்வாகிகள் சோ்ந்து சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதியிடம் வால்வை மையப்பகுதியிலிருந்து சாலையோரம் உள்ள பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

அவா் அதிகாரிகளிடம் இதுகுறித்து கோரிக்கை வைத்தாா். இதையடுத்து சனிக்கிழமை சாலையின் மையப்பகுதியில் இருந்த வால்வை சாலையோரம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com