இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் ஆதிதிராவிடா் காலனி உள்ளது.
இப்பகுதியில் கரோனா தொற்று தொடா்ந்து அதிகரித்து வந்ததால் சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினா் அப்பகுதிக்கு தடுப்பு அமைக்க சென்றனா்.
அப்போது அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இதனையடுத்து மண்டல அலுவலா் கோகிலா, சிறப்பு உதவி ஆய்வாளா் கண்ணன் ஆகியோா் சம்பவ இடம் சென்று பேச்சு நடத்திய பின்னா் தடுப்பு அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.