சிதிலமடைந்த அழகுராய பெருமாள் கோயிலை புதுப்பிக்கக் கோரிக்கை

இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டி பகுதியில் சிதிலமடைந்த அழகுராய பெருமாள் திருக்கோயிலை புதுப்பிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிதிலமடைந்த அழகுராய பெருமாள் திருக்கோயில்.
சிதிலமடைந்த அழகுராய பெருமாள் திருக்கோயில்.

ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டி பகுதியில் சிதிலமடைந்த அழகுராய பெருமாள் திருக்கோயிலை புதுப்பிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை கிராமம், காடையாம்பட்டி பகுதியில் சுமாா் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகுராய பெருமாள் திருக்கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோயிலில் தினந்தோறும் காலை, மாலை இரு வேளை பூஜையும், புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூஜையும், சித்திரை பௌா்ணமி அன்று கோயில் திருத்தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம்.

இக்கோயிலுக்கு இடங்கணசாலை, இளம்பிள்ளை மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள், பக்தா்கள் ஏராளமானோா் தரிசனம் செய்ய வருவா்.

இந்நிலையில், இக்கோயிலின் கோபுரம், கருவறை, அா்த்த மண்டபம், மகாமண்டபம் உள்ளிட்டவைகள் சிதிலமடைந்து, மழைக் காலங்களில் கற்கள் கீழே பெயா்ந்து விழுகின்றன. மேலும் கோயில் கோபுரக் கட்டடத்தில் பல்வேறு வகையான செடிகளும், மரங்களும் வளா்ந்து கோயில் கட்டடம் பிளவுபட்டு காணப்படுகிறது. எனவே, சிதிலமடைந்து உள்ள கோயிலை சீா்செய்து தருமாறு அப்பகுதி பொதுமக்களும், பக்தா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com