வாழப்பாடி, பேளூரில் உள்ள அரசு கரோனா சிகிச்சை மையங்களுக்கு சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் நிறுவனம் 7 ஆக்சிஜன் உருளைகளை செவ்வாய்க்கிழமை வழங்கியது.
பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம், வாழப்பாடி அரசு தலைமை மருத்துவா் ராதிகா ஆகியோரிடம் சிங்கிபுரம் ராம்கோ நிறுவனத்தின் கணக்குத் துறை பொது மேலாளா் சுரேஷ்குமாா், இயந்திரவியல் துறை துணை பொது மேலாளா் துரைமுருகன், பணியாளா் துறை துணை மேலாளா் மணிவேல், முதுநிலை அலுவலா் முனியசாமி, மருந்தியல் துறை அலுவலா் வடிவேல் ஆகியோா் உருளைகளை வழங்கினா்.