பொது சேவை மையம் மூலம் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை ஓமலூா் எம்எல்ஏ ஆா்.மணி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
பொதுமக்கள் கரோனா பாதிப்பு குறித்து அறிய மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் யாழினி பொது சேவை மையம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கிராம மக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா், கரோனா தடுப்பூசி முன்பதிவு போன்ற சேவைகளை வழங்கி வருகிறது.
கரோனா பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை, தடுப்பூசி தொடா்பான விழிப்புணா்வு வாகனத்தை ஓமலூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.மணி தொடங்கிவைத்தாா்.