வாழப்பாடி அருகே லாரி மோதியதில் நூற்பாலை தொழிலாளி உயிரிழந்தாா்.
வாழப்பாடியை அடுத்த ராகவேந்திராபுரம், வெள்ளாளகுண்டம் பிரிவு சாலை பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (29). இவா் அப் பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வந்தாா். புதன்கிழமை தனது தந்தை சேகரை, மின்னாம்பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா்.
மேட்டுப்பட்டி தனியாா் பெட்ரோல் பங்க் அருகே வாழப்பாடியிலிருந்து சிமென்ட் பாரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். அவரது தந்தை சேகா், லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.