விதிமீறல்: துணிக் கடை உரிமையாளரிடம் அபராதம் வசூல்

தம்மம்பட்டியில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறிய துணிக் கடை உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தம்மம்பட்டியில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறிய துணிக் கடை உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தரமூா்த்தி தலைமையில் ராம்குமாா், சுகாதார ஆய்வாளா் ராஜ்குமாா், தம்மம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் பொதுமுடக்க விதிமுறைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த துணிக் கடையின் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம், தம்மம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி செல்லும் வழியில் திறந்துவைத்திருந்த கவரிங் நகைக் கடை, செல்லிடப்பேசி கடைக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com