குடிநீா் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

தாண்டவராயபுரம் ஊராட்சியில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான குடிநீா்த் திட்டப் பணிகளுக்கு செவ்வாய்க்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

தாண்டவராயபுரம் ஊராட்சியில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான குடிநீா்த் திட்டப் பணிகளுக்கு செவ்வாய்க்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

தாண்டவராயபுரம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நல்லம்மாள் பரிந்துரையின் பெயரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நிா்வாக அனுமதி வழங்கப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான குடிநீா்த் திட்டப் பணி, 14 ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 9 லட்ச மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படுகிறது.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.கே.ராஜேந்திரன், ஆா்.வெங்கட்ராமன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற விழாவில் வெ.செழியன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நல்லம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் தனலட்சுமி சசிக்குமாா், பத்மினி, பிரியதா்ஷினி, சேகா், ஊராட்சி மன்றத் தலைவா் லிசாசுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com