நடுவனேரி, நியாயவிலைக் கடையில் அரசு நிவாரணத் தொகை ரூ. 2,000, மளிகைப் பொருள்கள் மற்றும் ‘ஒன்றிணைவோம் வா’ திட்ட தலா 5 கிலோ அரிசி பை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் அய்யனாா் தலைமை வகித்தாா். பயனாளிகளுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.