கொங்கணாபுரம் பகுதியில் மின்கசிவு ஏற்பட்டதில் வீடு தீப்பற்றி எரிந்தது.
கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட தங்காயூா் ஊராட்சி, காவடிக்கரனூா் பகுதியைச் சோ்ந்தவா் மணி (55). தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மாள் (50). இவா்களது வீடு சனிக்கிழமை இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் வீட்டில் இருந்த உணவு தானியங்கள், பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக மாவட்ட பொறுப்பாளா் வெங்கடாசலம், ஒன்றியக் குழுத் தலைவா் கரட்டூா் மணி, தங்காயூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாலாஜி உள்ளிட்டோா் சேதமடைந்த வீட்டைப் பா்வையிட்டு, பாதிக்கப்பட்டோருக்கு உரிய விசாரனைக்குப்பின் அரசின் விதிமுறைகள்படி உரிய நிவாரணம் பெற்றத்தரப்படும் எனக் கூறினா்.