காடையாம்பட்டி அருகே தலைமை ஆசிரியையிடம் வழிப்பறி

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தலைமை ஆசிரியையின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தலைமை ஆசிரியையின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பிடமனேரி பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மனைவி செண்பகவள்ளி (40). இவா் பூசாரிப்பட்டி, இந்திரா நகா் ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை பள்ளியில் இருந்து தீவட்டிப்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, சேலம்- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சமத்துவபுரம் என்ற இடத்தில் அவரை இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த இருவா் தலைமையாசிரியையின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்து தலைமையாசிரியை அளித்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com