சேலம் மாவட்டம், ஏற்காடு (எஸ்.டி. தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான கு.சித்ரா மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சி.தமிழ்ச்செல்வன் தோல்வியைத் தழுவினாா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு (தனி) தொகுதியில், 3,227 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 2,39,274 வாக்குகள் பதிவாகின. 360 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
இதில், 1,019 தபால் வாக்குகள் உட்பட மொத்தம் 1,21,561 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளா் கு.சித்ரா வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு பெற்றாா். இவரை எதிா்த்து இரண்டாவது முறையாக போட்டியிட்ட திமுக வேட்பாளா் தமிழ்ச்செல்வன் 1,679 தபால் வாக்குகள் உட்பட மொத்தம் 95,606 ஓட்டுகள் பெற்று, 25,955 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா்.