குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாரப்பட்டியில் குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாரப்பட்டியில் குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள எஸ்.பாப்பாரப்பட்டி, சாக்ரட்டீஸ் நகரில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த இரு மாதங்களுக்கு முன் இப்பகுதியில் குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் குழாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது.

அப்போது சாக்ரடீஸ் நகருக்குச் செல்லும் குழாய் இணைப்புகளில் ஏற்பட்ட உடைப்பு பல நாள்கள் ஆகியும் சரி செய்யாததால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக பெரும் சிரமப்பட்டு வந்தனா். மேலும், சாலை அருகே பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீரை எடுத்தும், அடுத்த பகுதிக்கு வந்து தண்ணீா் எடுத்தும் பயன்படுத்தி வந்தனா்.

இது குறித்து ஊராட்சிமன்றத் தலைவரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதாதல் பொதுமக்கள் ராசிபுரம் சாலையில் காலி குடத்துடன் மறியலில் ஈடுபட்டனா். இதனையறிந்த ஆட்டையாம்பட்டி காவல்துறையினா் நிகழ்விடம் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் ஊராட்சி மன்றத் தலைவரிடம் பேசி உடனடியாக குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com