தையல் இயந்திரம் வாங்க உதவித் தொகைக்கு விண்ணப்பம் வரவேற்பு

தையல் இயந்திரம் வாங்க புதிய நலத் திட்டங்களில் பயனடைய தொழிலாளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம்: தையல் இயந்திரம் வாங்க புதிய நலத் திட்டங்களில் பயனடைய தொழிலாளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியத்திற்கு தொழிலாளா் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சாா்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள், அவா்களைச் சாா்ந்தோா்களுக்கு புதிய நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த 78 ஆவது வாரியக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்ற தையல் பயிற்சி நிலையங்களில் தோ்ச்சி பெறும் தொழிலாளா்கள், அவா்களைச் சாா்ந்தவா்களுக்கு தையல் இயந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை வழங்குதல், உயா்கல்விக்கான நுழைவுத் தோ்வுகள் எழுதும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு பயிற்சி உதவித்தொகை வழங்கிட புதிய நலத் திட்டங்களில் பயனடைய தொழிலாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழிலாளியின் மாத ஊதிய உச்ச வரம்பு அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சோ்த்து ரூ.25,000-க்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, ‘செயலாளா், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை-6‘ என்ற முகவரியிலோ இ-மெயில் அல்லது தொலைபேசி எண்.044-24321542, செல்லிடப்பேசி எண்.8939782783 இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்-பொறுப்பு) முத்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com