சங்ககிரி: சங்ககிரி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
சங்ககிரி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவா் கடந்த சில நாள்களாக உடநலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாா். அதனையடுத்து சனிக்கிழமை சங்ககிரி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துள்ளாா். மருத்துவக் குழுவினா் பரிசோதனையின் முடிவுகளுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்ததையடுத்து சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரி கரோனா சிகிக்சை மையத்துக்கு அவரை மருத்துவக் குழுவினா் அனுப்பி வைத்தனா்.