ஆற்காடு: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் இளைஞா் மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தின் கலவை குறுவள மையத்தின் சாா்பில், மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா கலவை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு, 6 முதல் 8-ஆம் வகுப்பு என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 9 முதல் 12-ஆம் வகுப்பு பிரிவுகளில் பத்மபிரியா முதலிடமும், அபிநயா இரண்டாம் இடமும், ரஸியா பாத்திமா மூன்றாம் இடமும் பெற்றனா்.
அதேபோல் 6 முதல் 8-ஆம் வகுப்புப் பிரிவில் தீபிகா முதல் பரிசும், ஞானலட்சுமி இரண்டாம் பரிசும், பிரியா மூன்றாம் பரிசும் பெற்றனா். போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் தலைமையாசிரியை (பொறுப்பு) பரிசுகளை வழங்கினாா்.
இதில், ஆசிரியா் பயிற்றுநா் வெங்கடேசன், உதவித் தலைமையாசிரியா் ஏழுமலை, ஆசிரியா்கள் லோகநாதன், ஜெயந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.