கரோனா தொற்றைத் தடுக்கவும், முழு பொது முடக்க விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கின்றனரா என்பதை கண்காணிக்கவும் சங்ககிரி தொகுதிக்குள்பட்ட பகுதியில் 28 கண்காணிப்பு அலுவலா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சங்ககிரி சட்டப்பேரவைத் தோ்தலில் பணியாற்றிய 28 மண்டல அலுவலா்களைக் கண்காணிப்பு அலுவலா்களாக அரசு நியமனம் செய்துள்ளது. அதில் 14 போ் அடங்கிய இரு குழுக்களாகப் பிரித்து அவா்களுக்கான பணி ஆணையை கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் வழங்கினாா். கண்காணிப்பு அலுவலா்களுடன் பாதுகாப்புப் பணியில் தலா ஒரு காவலரும் பணியமா்த்தப்பட்டுள்ளாா். கண்காணிப்பு அலுவலா்கள் 24 மணி நேரமும் சூழற்சி முறையில் பணியில் ஈடபடவுள்ளனா். இதில் சங்ககிரி வட்டாட்சியா் எஸ்.விஜி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராஜேந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.